இந்த மாசத்துக்கான பதிவு கோட்டா முடிஞ்சிருச்சு அதனால Jolly யா இருந்தா நம்ம நண்பர் ACE(@)சரவணன் டேக் பண்ணதோட விடாம மீண்டும் ஞாபகப்படுத்திட்டாரு, ப்ளாக் நண்பர்கள் எல்லாரும் ஏற்கனவே ஏகப்பட்ட அழகுகளைப் போட்டு தாக்கிட்டாங்க அதனால பெரிய யோசனைக்குப் பிறகு கோடி அழகுகளில் இதோ என் ஆறு

1.உணவு
செவிக்கு கூட உணவில்லாம ஒரு வாரம் இருந்திட முடியும் ஆனா இந்த வயிற்றை 2 நாள் விட்டாலே என்னென்னவோ ஆயிடும்.
அதுலயும் அந்த இட்லி-சட்னி Combination super. காலைல எங்க வீட்ல தினம் இட்லிதான் அதுவும் எங்கம்மாவோட கைப்பக்குவத்து இட்லி சும்மா மல்லிகைப் பூ மாதிரி இருக்கும் அதுல ஒரு 10 அ 12 இட்லிய உள்ள தள்ளுனா ஆஹா அது தான் அழகு.இந்த மாதிரி மனதை குதூகலப்படுத்தும் எந்த உணவும் அழகுதான்

2.தண்ணீர்
உணவு கூட 8 மணி நேரத்துக்கு ஒரு தடவ சாப்பிட்டால் போதும் ஆனா இந்த தண்ணீர் இல்லன்னா அவ்வளவுதான்!
அதுனால தண்ணீர் எந்த வடிவத்திலும் அழகு ஆறு,கிணறு,அருவி,பானையில் உள்ள நீர்....

3.தூக்கம்
நிம்மதியான தூக்கம் ஒரு அழகு.தூக்கம் இல்லாமல் எந்த மனிதனாலும் சிறப்பாக செயல்பட முடியாது. அதுலயும் நிம்மதியான தூக்கம்னாஎப்பிடின்னா படுத்தா அடுத்த 5 நிமிஷத்துல தூங்கிடணும் அதுதான் வாழ்க்கைக்கும் மனிதனுக்கும் அழகு.

4.பொழுதுபோக்கு
அன்பே சிவம் படத்தின் ஓர் பாடலில் வரும் வரி " ஏதாச்சும் போதை ஒன்னு எப்போதும் தேவை கண்ணா இல்லாட்டி மனுசனுக்கு சக்தி இல்ல"
இங்க போதைன்றது பொழுதுபோக்கு.
சின்ன வயசுல விளையாடிய கிட்டிப்புள்,கல்லா மண்ணா.... இதெல்லாமே அந்த வயது பொழுதுபோக்குகள் தான் அதுனால வயதுக்கேற்ற பொழுதுபோக்கும் அழகே!

5.வேலை
படிக்கும் போது படிக்கும் வேலை அழகு,வேலையில் சேர்ந்த பின் செய்யும் வேலை அழகு,சும்மா இருக்கும் போது கூட மனம் ஏதோ ஒன்றை அசை போடுவது வேலை தான் ஆக வேலை அழகு.

6.சிரிப்பு
இந்த அழகுக்கு வயது வித்தியாசமே கிடையாது.
உலகில் உள்ள அழகுக்கெல்லாம் மணிமகுடம் வைத்தாற் போன்று இந்த புன்னகை (எ) சிரிப்பு அழகு தான்.

எழுதாத அழகைப்(?) பற்றி எழுத எண்ணியதால் இந்த ஆறும் என் பார்வையின் வார்த்தையில்......











முன்னாடி போட்ட பதிவுல Image Size சின்னதா இருந்ததால சரியா படிக்க முடியலன்னு தெரிய வைத்த பொற்கொடி அவர்களுக்கு நன்றி.இதோ சரியான வடிவத்தில் மீண்டும், Click செய்தாலே போதும்..
வரிகள் உங்கள் கண்கள் முன் விரியும்

பதிவு போடாததுக்கு முக்கிய காரணம் மத்தவங்க பதிவ படிச்சிட்டு comment போட்றதே ரொம்ப சொகமா இருந்ததாலதான்..

இருந்தாலும் இதோ நம்ம Super நடிகரின் Sivaji-The Boss பாடல்கள் ஓர் சின்ன அலசல் (பாட்ல Doubt வந்தா இந்த Image ஐ Save செய்து Zoom செய்து படித்துக் கொள்ளவும்) நம்மளால முடிஞ்ச சின்ன உதவி ஹி ஹி ஹி..

நம்ம வாத்தியார்(மு.கா)பயந்த மாதிரியே Leak ஆனது உண்மயான பாடல்கள்தான் :(



இது தான் தலைவரோட அறிமுகப் பாடல்னு வேற சொல்லனுமா?


தேவுடா தேவுடா ஸ்டைலில் இருந்தாலும் SPB ன் வேகம் அதை மறக்கடிக்கும்


மண் வாசம் வீசும் வார்த்தைகளை தந்திருப்பவர் நா.முத்துக்குமார்





இது சஹானா பாடல்-மென்மையான பாடல்


வரிகளுக்கு சொந்தக்காரர் வைரமுத்து இவருடைய கற்பனை வார்த்தைகள் இசை இரைச்சலையும் தாண்டி நம் காதில் விழுகின்றது(!)




வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி-மென்மையுடன் அதிரடியும் கலந்திருக்கிறது


புதுமையான கற்பனை வார்த்தைகளோடு விளையாடியிருப்பவர் வைரமுத்து வே தான் இவரது வரிகளில் காதலும் காமமும் கலந்திருக்கிறது




இது Style ரஜினிக்காக உருவாக்கியிருக்கின்றனர் வரிகளுக்கான உரிமை பா.விஜய் யிடம்


வாலியின் வயது 75என்றால் அவரது மனதுக்கு வயது 20 தான் இவரின் வரிகளின் இளமையுடன் மிரட்டியிருப்பது ARR குரலில்



இது அநேகமாக ரஜினியின் என்ட்ரியின் போது இருக்கலாம் அல்லது படம் முழுவதும் Background Score ஆக வரலாம்



ஆக அனைத்து பாடல்களும் கேட்பவர்களின் நெஞ்சைத் தொடுவது உறுதி..


அப்பாடா பதிவு போட்டாச்சு எப்டி தான் 100 , 200 ன்னு பதிவெல்லாம் போட்றங்களோ? :)

Newer Posts Older Posts Home