விலா எலும்பில் வலு தேயும் வரை
விடுவதில்லை என எனைத் தேடிப்பார்க்க
ஆரம்பித்துவிட்டேன்!
மலை முகடுகளில் பொட்டல் காடுகளில்
பாதை தெரியும் வரை என்
பாதம் தேயும் வரை!
உமியைத் தூக்க தெம்புள்ளவரை
கலவி ஆசை நரைக்காதாம்!
உமியைப் பார்க்க முடியும் வரை
எனைப் பற்றிய என் தேடல் ஆசையும் நரைக்கப் போவதில்லை!
இந்தப் பாதை எங்கே முடியும் என்று எனக்கு கவலை இல்லை
எனக்கான இன்னுமொரு பாதையை முடிந்த இடத்திலிருந்து வகுத்துக் கொண்டு எனைப் பற்றிய தேடல் பயணம் இனிதே தொடரும்!
பயம் வரும் வரை
பயணங்கள் எப்போதும் முடிவதில்லை!

"டேய்!"
பின்னாலிருந்து அரையிருட்டில் யாரோ ஒரு ஆண் கூப்பிடுவது போல் கேட்டது மணிக்கு.....
இருந்தாலும் நேரம் நள்ளிரவைத் தாண்டியிருந்ததால் நின்று யாரென்று பார்க்க அவனுக்குத் தைரியம் வரவில்லை....
"இதுக்குத்தான் ரெண்டாம் ஆட்டத்துக்கு போகக் கூடாதுன்றது எங்க விட்றானுங்க..இப்ப பாரு அவனவன் வீட்டுக்குப் போய்ட்டான் நம்ம வீட்டுக்கு மட்டும் இந்த சுடுகாட்ட தாண்டி போக வேண்டியதா இருக்கு"-என மனதிற்குள் தன்னை நொந்து கொண்டான்.....
"டேய்!உன்னத் தாண்டா" --மீண்டும் அதே குரல் சற்றே அதட்டல் தொனியுடன் மிக அருகில் கேட்பது போல் தோன்றியது அவனுக்கு....
முகமெல்லாம் வியர்த்துப் போனது இதயம் நிமிடத்திற்கு லட்சம் முறை துடிப்பதாக தோன்றியது அவனுக்கு....
தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நடையின் வேகத்தை சற்றே கூட்டினான்.....
"டேய்!மணி நில்லுடா"
சப்த நாடியும் அடங்கி விட்டது மணிக்கு......
நின்றான்! உலகில் உள்ள அத்தனை கடவுளரையும் துணைக்கு அழைத்தான்..
தூரத்தில் யாரோ சைக்கிளில் வருவது தெரிந்ததும்....பயம் சற்றே விலகிய தைரியத்தை அவனுள் வரவழைத்தது....
அந்த உருவம் மெல்ல நெருங்கி வருவது தெரிந்தது மணிக்கு...
தோளில் கை வைத்தது!ஏற்கனவே நடுங்கிக் கொண்டிருந்த மணிக்கு நடுக்கம் அதிகமாகி மயங்கி கீழே விழும் நிலை......
மெதுவாகத் திரும்பி முகத்தைப் பார்த்தான்....
கலவரம் விலகாதவனாய் உற்று நோக்கினான்
பக்கத்து வீட்டு திலீப் தான் அது....
"இப்பதாண்டா ஊர்ல இருந்து வரேன்.அங்கயிருந்து உன்னப் பாத்துட்டு கூப்பிட்டுக்கிட்டே வரேன்,திரும்பி கூடப் பாக்க மாட்ற.நல்லாயிருக்கியாடா...வீட்லஎல்லாம் நல்லாயிருக்காங்களா"திலீப் கேட்டான்
விட்ட மூச்சை திரும்பி வாங்கி கொண்டிருந்தான் மணி.
"டேய்!ஏண்டாஎன்னவோ போல இருக்க"னு திலீப் கேட்டதும் பற்றிக் கொண்டு வந்தது மணிக்கு அடக்கிக் கொண்டு "அதெல்லாம் ஒண்ணுமில்லடா"நு சமாளித்து ஒரு நிலைக்கு வந்தான்.
ஊர் விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டே நடக்க ஆரம்பித்தனர்.
மணி உள்ளூரில் 3ம் ஆண்டு கணிப்பொறி அறிவியல் பட்டப் படிப்பு படிப்பவன்.
திலீப் சென்னையில் உள்ள எஞ்சினியரிங் கல்லூரியில் 3ம் ஆண்டு படிப்பவன்.இப்போது விடுமுறை ஆதலால் ஊருக்கு வந்துள்ளான்.
"டேய் மணி ராதா என்னடா ஆனா?"
(இருவரும் உயர் கல்வியில் கற்ற பாடங்களில் ராதாவும் ஒருத்தி)
"அவளுக்குத்தான் அடுத்த மாசம் கல்யாணம் நிச்சயம் பண்ணியிருக்காங்கடா"
சோகமாய்க் கூறிவிட்டு ஏதும் பேசாது அந்த பள்ளி நாட்களை அசை போட ஆரம்பித்தான் மணி......


அசை போடுவோம்.....

SMS கடிகள் ஜாக்கிரதை..

பின் வரும் கடிகளை கடித்தவர்கள் "வெறித்தனமா யோசிப்போர் சங்க கண்மணிகள்"

கடி 1:

Man1: Bus stand la Meen saapta moonu per mandaya pottuttaankalaam..
Man2: Aiyayyo! appuram?
Man1: Appuram mandaya Naai Thookittu poiduchaam..

கடி 2:

Stu: Enna sir ithu?
Tea: Question Paper..
Stu: Appo ithu?
Tea: Answer paper..
Stu: Enna Koduma sir ithu question paper la question irukkuthu..answer paper la answer’a kaanom..

கடி 3:

Thirumaal senjaa “Makimai”
Sivan senjaa “Thiruvilayaadal”
Kannan senja “Leelai”
Boys Naanga senja mattum “Eve-Teasing” aa
Enna Ulagamadaa..

கடி 4:

Tea: Avan mattum evlo nalla padikkiraan unnala Yen mudiyala..
Stu: Naan Avan Illai Madam..

கடி 5:

Sorry for the disturbance,Intha Address enga irukkunnu konjam solla mudiyumaa..
M.Kumaran S/O.Mahalakshmi,
7G,Rainbow Colony,
Anna Nagar Muthal Theru,
Chennai-600028.

எப்பிடியெல்லாம் கடிக்கிறாய்ங்க பாருங்க மக்களே!

இன்று (04/07/2007) உன் பிறந்த நாள்.....


நமக்கு இடையில் இந்த வாழ்த்துக் கவிதையெல்லாம் தேவையில்லை தான் என்றாலும் என்னை வெளிப்படுத்த இந்த் இனிய நாளை சந்தர்ப்பமாக்கிய என் வார்த்தைகள்...

பூமிக்கு என் உடல் வந்து 2 ஆண்டுகள்
கழித்து உயிர் வந்த அதிசயம்-நீ!

என் ஆழ்மனதின் ஓசைகளையும் கேட்கும்
திறன் கொண்ட அதிசயம்-நீ!

என் ஒவ்வோர் தேவைகளையும் சரியாகத்
தெரிந்த அதிசயம்-நீ!

வினாக்களையே தரும் என்னிடம் என்றும்
விடையாகத் தெரியும் அதிசயம்-நீ!

என் ஒவ்வொரு காத்திருப்புக்கும் அர்த்தம் சொன்னவன் நீ!
என் மொத்த வாழ்வின் காத்திருப்பின் அர்த்தமும் நீ!

இலக்கியம் சொன்ன இலக்குவனை நான் அறியேன்!
ஆனால் என் வாழ்வின் இலக்கணம் நீ!

எனக்காக எதையும் செய்பவன் நீ
உனக்காக எதை நான் செய்ய எத்தனித்தாலும்
"எதுக்கு அது?"என்பவன் நீ!

ஏற்றத்தில் தட்டிக் கொடுப்பவனும் நீ!
இற்க்கத்தில் தட்டி வைப்பவனும் நீ!

உடன் பிறந்தவனுக்கு உதவி செய்வதையே பாரமென
எண்ணும் உலகில் உடன் பிறந்தவனின் நண்பர்களுக்கும்
உதவி செய்யும் உன் மனப் பாங்கு என்னிடமும்
எவரிடமும் கண்டதில்லை நான்!

நான் தட்டுத் தடுமாறிய பொழுதிலெல்லாம்
என் வாழ்க்கைப் பாதயைக் காட்டியவன் நீ!
மாற்றியவனும் நீயே!

நமக்குள் பெரிதாக எந்த பிரச்சினையும் எழுந்ததில்லை
எழவும் அனுமதிக்காதவன் நீ!
எனை அழவும் அனுமதிக்காதவன் நீ!

இன்னுமொரு பெற்றோராய்
உற்ற நண்பனாய்
நல்ல ஆசனாய்...
இப்படி எல்லாமுமாய் எனக்கு நீ!

நீ என் தம்பியாகக் கடவதற்கு தவம் தான்
செய்திருப்பேனோ என எண்ண வைக்கிறாயடா நீ!

மறு பிறவிகளில் எனக்கு நம்பிக்கை இல்லை தான்
ஆனாலும் தவம் செய்ய ஆரம்பித்துவிட்டேன் வரும்
பிறவிகளிலும் உனைத் தம்பியாகப் பெற!

நம் பெற்றோரின் வாழ்வின் அர்த்தம் நாம்
உன் வாழ்வின் அர்த்தம் நாங்கள் எங்களுக்காக
எதையும் துச்சமெனத் தூக்கி எறிபவன் நீ
உனக்காகவே எங்கள் இந்த வாழ்க்கை.........

இன்னும் என்னென்னவோ மனதில் இருந்தாலும் வார்த்தைகளாய் வர மறுக்கும் அழகோவியங்கள் அவை. வாழ்த்துக்கள்டா குட்டி!

Happy Birthday da Kutti

Older Posts