"டேய்!"
பின்னாலிருந்து அரையிருட்டில் யாரோ ஒரு ஆண் கூப்பிடுவது போல் கேட்டது மணிக்கு.....
இருந்தாலும் நேரம் நள்ளிரவைத் தாண்டியிருந்ததால் நின்று யாரென்று பார்க்க அவனுக்குத் தைரியம் வரவில்லை....
"இதுக்குத்தான் ரெண்டாம் ஆட்டத்துக்கு போகக் கூடாதுன்றது எங்க விட்றானுங்க..இப்ப பாரு அவனவன் வீட்டுக்குப் போய்ட்டான் நம்ம வீட்டுக்கு மட்டும் இந்த சுடுகாட்ட தாண்டி போக வேண்டியதா இருக்கு"-என மனதிற்குள் தன்னை நொந்து கொண்டான்.....
"டேய்!உன்னத் தாண்டா" --மீண்டும் அதே குரல் சற்றே அதட்டல் தொனியுடன் மிக அருகில் கேட்பது போல் தோன்றியது அவனுக்கு....
முகமெல்லாம் வியர்த்துப் போனது இதயம் நிமிடத்திற்கு லட்சம் முறை துடிப்பதாக தோன்றியது அவனுக்கு....
தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நடையின் வேகத்தை சற்றே கூட்டினான்.....
"டேய்!மணி நில்லுடா"
சப்த நாடியும் அடங்கி விட்டது மணிக்கு......
நின்றான்! உலகில் உள்ள அத்தனை கடவுளரையும் துணைக்கு அழைத்தான்..
தூரத்தில் யாரோ சைக்கிளில் வருவது தெரிந்ததும்....பயம் சற்றே விலகிய தைரியத்தை அவனுள் வரவழைத்தது....
அந்த உருவம் மெல்ல நெருங்கி வருவது தெரிந்தது மணிக்கு...
தோளில் கை வைத்தது!ஏற்கனவே நடுங்கிக் கொண்டிருந்த மணிக்கு நடுக்கம் அதிகமாகி மயங்கி கீழே விழும் நிலை......
மெதுவாகத் திரும்பி முகத்தைப் பார்த்தான்....
கலவரம் விலகாதவனாய் உற்று நோக்கினான்
பக்கத்து வீட்டு திலீப் தான் அது....
"இப்பதாண்டா ஊர்ல இருந்து வரேன்.அங்கயிருந்து உன்னப் பாத்துட்டு கூப்பிட்டுக்கிட்டே வரேன்,திரும்பி கூடப் பாக்க மாட்ற.நல்லாயிருக்கியாடா...வீட்லஎல்லாம் நல்லாயிருக்காங்களா"திலீப் கேட்டான்
விட்ட மூச்சை திரும்பி வாங்கி கொண்டிருந்தான் மணி.
"டேய்!ஏண்டாஎன்னவோ போல இருக்க"னு திலீப் கேட்டதும் பற்றிக் கொண்டு வந்தது மணிக்கு அடக்கிக் கொண்டு "அதெல்லாம் ஒண்ணுமில்லடா"நு சமாளித்து ஒரு நிலைக்கு வந்தான்.
ஊர் விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டே நடக்க ஆரம்பித்தனர்.
மணி உள்ளூரில் 3ம் ஆண்டு கணிப்பொறி அறிவியல் பட்டப் படிப்பு படிப்பவன்.
திலீப் சென்னையில் உள்ள எஞ்சினியரிங் கல்லூரியில் 3ம் ஆண்டு படிப்பவன்.இப்போது விடுமுறை ஆதலால் ஊருக்கு வந்துள்ளான்.
"டேய் மணி ராதா என்னடா ஆனா?"
(இருவரும் உயர் கல்வியில் கற்ற பாடங்களில் ராதாவும் ஒருத்தி)
"அவளுக்குத்தான் அடுத்த மாசம் கல்யாணம் நிச்சயம் பண்ணியிருக்காங்கடா"
சோகமாய்க் கூறிவிட்டு ஏதும் பேசாது அந்த பள்ளி நாட்களை அசை போட ஆரம்பித்தான் மணி......


அசை போடுவோம்.....

13 comments:

hi hi! thriller ellaam eludhareenga!

kadhai nalla irukku!

July 14, 2007 at 5:25 AM  

ada, naan thaan first a! superu!

July 14, 2007 at 5:25 AM  

pera p aathathum, I tht it was a love story!

July 14, 2007 at 5:26 AM  

raadhava pathi vera onnume sollala?

July 14, 2007 at 5:26 AM  

5!

July 14, 2007 at 5:26 AM  

ennanga neengalum kadhai gothaala kudhichiteengala.....kalakals :)

July 14, 2007 at 9:10 PM  

@dreamzz
//raadhava pathi vera onnume sollala?//
சொல்லிடுவோம்...தொடரின் முதல் பாகம்தான் இது போகப் போக தெரிய வைச்சிடுவோம்...
//5! //
டாங்ஸ்ங்கோ!!

July 16, 2007 at 5:44 PM  

@bharani
//ennanga neengalum kadhai gothaala kudhichiteengala.....kalakals :) //
சிறு கதை இல்ல பில்லு தொடர் கதை...உங்களையெல்லாம் அவ்ளோ சீக்கிரம் விட்ற ஐடியாவெ இல்ல...

July 16, 2007 at 5:45 PM  

kadhai ellam enakku ezhudhavey varadhunga...neenga jamaaikareenga ponga...radhu pathi info kudunga adutha paagathil...

so kadhai ezhudha theriya enakku neenga dhaan kathu tharanum enna okva..

July 24, 2007 at 6:13 PM  

ivlo dhooram vandhutu mukiyamanadha podalana eppadi...

July 24, 2007 at 6:14 PM  

10 pottenu ninaikaren..indha moderation ennathuku vachirukeenga, unga personal info leak aagama irukaradhuka...enna comment podarenu theriya maatengudhey..

July 24, 2007 at 6:15 PM  

@Ramya
//so kadhai ezhudha theriya enakku neenga dhaan kathu tharanum enna okva.. //
சொல்லித்தர்ர அளவுக்குஎனக்கே ஒண்ணும் தெரியாதே!! :)

July 24, 2007 at 6:32 PM  

@Ramya
//indha moderation ennathuku vachirukeenga//
Moderation ஐ எடுத்துட்டேங்க..
Be happy :)

July 24, 2007 at 6:34 PM  

Newer Post Older Post Home